படித்ததில் பிடித்த தத்துவங்கள்

புரியாத வார்த்தை இருந்தும் பயன் இல்லை! புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயன் இல்லை....
 
அழுது நீ கோழையாகாதே! உனக்கு நண்பன் நீயே! உன்னை காப்பற்ற வருபவர் எவர் உளர்? நீயே உன் காவலன்....ஆதலினால் யாரையும் எதற்கும் எதிர்பார்க்காதே!
 
உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்! ஆனால் எல்லைக்குள் ஒரு போதும் வாழ்க்கையை அமைத்து விடாதே....!
 
* இதுவரை ஆராய்ச்சிக்கு உட்ப்படுத்தாத ஒன்று எது தெரியுமா அன்பு. காரணம் அன்பென்றால் அகிலமும் அடங்கிவிடும் என்பதனால்.
 
*ஒருவனின் வார்த்தை தரும் வலியை விட அவன் செய்யும் செயலின் வலி அதிகம்.
 
* அன்பானவர்களிடம் உன் மனதை மறைத்து விடாதே. உன் மனதில் உள்ளதை மறைப்பதாயின் அன்பாய் இருப்பது போல் நடித்து வாழாதே.
 
* கற்பனையில் சித்திரத்தை வரைந்து விடலாம், ஆனால் ஒருவனின் மனதை புரிந்து கொள்ளாமல் நண்பன் ஆகி விட முடியாது.
 
* ஒரு மனிதனின் அதீத அன்பானது தாயிடம் மட்டுமே உள்ளது..
 
* ஒன்றை நாம் பார்க்கும் விதத்தில் அது சரி தப்பு என்று முடிவு எடுத்து விடுகிறோம். அதை நாம் எப்போது சரியா தவறா என்று ஆராய்ந்து பார்ப்பதில்லை அப்படி நாம் ஆராய்ந்து பார்த்து விட்டால் சந்தேகங்கள் மனிதர் இடையே தோன்றாது.
 
* ஆயிரம் தடவை உன் சந்தேகத்தை நேரே கேள் அது சிறிய கோபத்தை உருவாக்கும் ஆனால் பதில் கிடைத்து விடும், ஆனால் உன் சந்தேகத்தை நேரே கேட்க்காமல் உன்னுள் வைத்து மறை முகமாய் ஒருவனைக் காயப் படுத்தாதே அது உனக்கு எல்லையற்ற துன்பத்தை தந்துவிடும்...
 
* இழப்பு அல்லது பிரிவின்றி எவரும் ஒன்றின் அருமையை உணருவதில்லை.
 
* நான் என்று சொல்லும் போது எனது அகத்தில் இருப்பதையே கூறுகிறோம், எனது என்று சொல்லும் போது எனக்காக புறத்தில் இருப்பதை கூறுகிறோம். இதை எல்லாம் தாண்டி நாம் என்று கூறும் பொழுதே வெளியில் எமக்காக காத்திருக்கும் வாழ்க்கையைப் பெற்றுக் கொள்கிறோம்.
 
* மனிதனாய் பிறந்து மிருகத்தின் குணத்தைக் கொண்டிருப்பதை விட. மிருகமாய் பிறந்து அது தன் இனத்தின் மீது காட்டும் அன்பு போல் காட்டி வாழ்ந்து விடு மனிதா!
 
* நிஜங்கள் பலவற்றை கண்ணெதிரே தொலைத்து விட்டு இருளெனும் கனவில் தேடுகிறேன். நீண்ட நாட்களாக, பல மாதங்களாக, சில வருடங்களாக....
 
* கல்லைச் சலவை செய்யும் அருவியே இந்த மனிதனின் மனதையும் ஒரு முறை சலவை செய்து விட்டு செல்வாயா?.
 
* மனதில் பூக்கும் மல்லிகை பூ அன்பு. அதனைத் தூக்கி குப்பையில் போட்டால் கூட நறுமணம் வீசும்.
 
* ஆயிரம் தடவை யோசித்து முடிவெடுப்பதை விட எடுத்த முடிவில் நிரந்தாரமாய் இருப்பதே அழகு.நேரத்திற்கு தகுந்த மாதிரி செயற்ப்படாதே.
 
* திட்டமிடல் வாழ்கையில் அவசியாமாய் இருக்கிறது, ஆனால் திட்டமிட்டபடி வாழ்வு செல்லாவிடின் வெறுப்பு ஏற்படுகிறது. உங்கள் அத்தியாவசியத் தேவைக்கு திட்டமிடுங்கள் வாழ்க்கையை திட்டமிடாதீர்கள்.
 
* ஆயிரம் பேரின் கண்கள் உன்னை நோக்கினாலும் இரு கண்கள் மட்டுமே என்றும் உன்னை அன்பாக நோக்கும் உன்னைப் பெற்றவள், நீ அவதரிக்க காரணமாய் இருந்தவர்.
 
* கோபம் வருகின்ற பொழுது வார்த்தையின் அளவுகள் அதிகரிக்கின்றன. அன்பானவர்களைக்(அன்பானவரைக்) கூட எதிர்த்து விடுகின்றது..
 
* கெட்டவனாக இருந்து கொண்டு நல்ல பெயர் எடுப்பதைவிட.. நல்லவனாய் இருந்து கெட்ட பெயர் எடுப்பது எவ்வளவோ மேல்..
 
* கடற்கரையில் இருக்கும் கப்பலை விட கடலினுள் இருக்கும் படகின் பெறுமதி அதிகம். அது போல் மனிதா நீ உருவாக்கும் பொருள் உபயோகாமானால் சிறப்பு.
 
* பெருங் கடலுக்கு எல்லை சிறிய நிலப்பரப்பு..உனக்கு எல்லை உனது பெற்றோர்.
 
கடல் எல்லையைத் தாண்டினால் நிலம் அழிந்துவிடும். நீ எல்லையத் தாண்டினால் நீ அழிந்து விடுவாய்.
 
* தந்தையின் நம்பிக்கை இருக்கும் வரை தனயன்(மகன்) வழிதவறான்.
 
தாயின் அன்பு இல்லையானால் தனபதியாய்(குபேரன்) இருந்தும் பயன் இல்லை.
 
சகோதரர் துணையிருப்பின் ஒரு போதும் தனியன்(தனித்த ஆள்) ஆகான்.
 
இத்தனையும் என்னிடம் உண்டு... உன்னிடம் உண்டா??
 
* வாழ்ந்தவனுக்கு அனுபவம் பதில் சொல்லும்
 
வாழ்பவனுக்கு காலம் பதில் சொல்லும்
 
வாழப் போறவனுக்கு மனம் பதில் சொல்லும்.
 
* அன்பின் ஆழம் தெரியாத மனிதா.
 
நீ உன் தாயின் அரவணைப்பை அறிந்திருக்க மாட்டாய்.
 
நட்பின் ஆழம் தெரியாத மனிதா.
 
நீ உன் தந்தையின் பாசத்தை அறிந்திருக்க மாட்டாய்.
 
காலப் போக்கில் உன் வாழ்வே தெரியாது இருந்து விடுவாய்....
 
* கண்ணை மூடும் போது தூங்குகிறோம். கண்ணைத் திறக்கும் போது எழுகிறோம். அது போல் விழுகிற போது எழுந்துவிடு எழும் போது விழுவது சகஜம் அதற்காக விழுந்த படியே இருந்து விடாதே..
 
* குறை உடலில் இருந்தால் அதை நீ பொருட்ப்படுத்தாதே. உள்ளத்தில் உள்ளதா முதல் அதை நிவர்த்தி செய்து விடு நீ உன்னை நேசிப்பாய் பின் மற்றவர்கள் உன்னை நேசிப்பர்.
 
* கனவு இல்லம் கனவாகலாம்... ஆனால் இல்லம் ஒரு போதும் கனவாகி விடக்கூடாது..
 
* இமைகள் திறக்கின்றன நீ பார்ப்பதற்கு, இமைகள் மூடிவிட்டால் பார்வையை இழந்துவிடுவாய்
 
உதடுகள் திறக்கின்றன மனதில் இருப்பதை வெளியிட, உதடுகள் மூடிவிட்டால் உமையாகிவிடுவாய்.
 
பிரிவுகள் ஏற்படும்போதே நீ வெளிச்சத்தை சந்திக்கிறாய் வாழ்வில்.
 
* ஒருவன் எப்பொழுது தனக்கு ஏற்படும் தடைகளையும் துன்பங்களையும் கருத்திற்க் கொள்ளாமல் வாழ்கிறானோ அவனே வாழ்வில் நிறையத் தோல்விகளைச் சந்தித்தவனாவான். வெற்றி பெற்றவன் துன்பத்தையும் தடங்களையுமே வாழ்வில் கொண்டவனாக இருப்பான். பல தடவை தோற்றுவிடு நீ உன் வாழ்வை வென்று விடுவாய்.
 
 
* காற்றின்றி படகுகள் அசைவதில்லை
 
தாயே நீ இன்றி எனக்கு முன்னேற்றம் ஏது?
 
கடல் அலையே அசையாதிருக்கும் படகை மூழ்கடிக்காதே.
 
* உனக்கு ஒரு பொருள் பிடித்திருந்தால் உன் பெற்றோரைத் தானே முதல் கேட்க்கிறாய்.. என் நீ வளர்ந்த பிறகு அவர்களிடம் கேட்பதை விட்டு உன்வழி போகிறாய். நீயும் ஒரு நாள் பெற்றோர் ஆவாய் என்பதை மறந்து விட்டாயோ?...
 
* பெற்றோரின் பெறுமதி என்ன தெரியுமா? நீ வாழும் வரை அவர்களுக்கு துன்பம் கொடுக்காது அவர்களது மரியாதையை இழக்க விடாது காப்பது. இல்லையேல் உன் பெறுமதி உன்னை விட்டு சென்று விடும்...
 
* காதலிப்பதால் ஏற்படும் நன்மையை விட அக் குறுகிய காலத்தில் ஏற்றப்படும் தீமை அதிகம்...நான் காதலித்தவனும் அல்ல காதலிப்பவனும் அல்ல..
 
* கனவே உன் கடலில் என்னை முழ்கடித்து விடாதே எனக்கு நீந்த தெரியும். அவ்வாறு நான் நீந்தித் தப்பி விட்டால் நீ தோற்று விடுவாய்.
 
* நம்பிக்கை நற்கனவை நனவாக்கிவிடும். அவநம்பிக்கை உன் வாழ்க்கையையே கனவாக்கிவிடும்.....