டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். இது சாதரணமாக, திடீரென பாதிப்பை ஏற்படுத்தி, அதிக காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, கடுமையான தசை வலி, சோர்ந்து போதல், முட்டு வலி, கண்ணின் பின்புறம் வலி மற்றும் தோலில் ஒரு வகை கலர் மற்றம் ஏற்படுத்தும். இதில் குறிப்பாக ஜுரம், தோல் நிற மாற்றம், தலைவலி தான் எல்லா டெங்கு நோயாளிகளுக்கும்.இதுபோக இரத்த கசிவுகளை ஏற்படுத்தலாம்.

டெங்கு இரத்த கசிதல் நோய் (Dengue hemorrhagic fever) என்பது மிக தீவிரமான தன்மை கொண்டது. உடலில் தோலில் இரத்த கசிவு, மூக்கில் இரத்த வடிதல், வாய் ஈருவில் இரத்தம் வருதல்,கருப்பு மலம், இரத்த வாந்தி வரலாம். இந்த வகையான டெங்கு இரத்த கசிவு நோய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் dengue shock syndrome என்னும் வகைக்கு இறப்பு வரை கொண்டு சென்று விடும்.

மூட்டு வலி, சருமத்தில் திட்டுக்கள், வீங்கிய லிம்ப் கோடுகள் இவையும் `டெங்கு' காய்ச்சலால் ஏற்படும்.குழந்தைகளைப் பாதிக்கும் பொழுது வயிற்று வலியும், இரத்த ஒட்ட பாதிப்பும் ஏற்படுகின்றது.

டெங்கு பரிசோதனை:

* முழு இரத்த பரிசோதனை

* டெங்கு பரிசோதனை போன்றவை ஆகும். டெங்கு வைரஸ் கிருமி மூலம் ஏற்படும் பாதிப்பு என்பதால் குறிப்பிட்ட சிகிச்சை என்பது கிடையாது. ஆனால், நோயாளிக்கு மருத்துவ கண்காணிப்பும், மருத்துவ பரிசோதனையும் மிகவும் அவசியம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். #ஆஸ்ப்ரின் போன்ற வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. இது இரத்தப் போக்கினை ஏற்படும் அபாயம் கொண்டது.

டெங்கு காய்ச்சலுக்கு முறையான சிகிச்சை இல்லையெனில் ஏற்படும் பிரச்சனைகள்: .

* வயிற்றில் அதிக வலி

* வயிற்று குமட்டல்

* உடல் வலி

* கல்லீரலில் நீர் சேர்தல்

* நெஞ்சில் நீர் சேர்தல்

* தலைவலி போன்றவை ஆகும்.

காய்ச்சலை கட்டுப்படுத்துதலும், பிளேட்லெட் எண்ணிக்கை குறையாது கவனித்து சீர் செய்தலுமே இத்தாக்குதலுக்கு உரிய மருத்துவ சிகிச்சை.

டெங்குக்கு பப்பாளி

No automatic alt text available.

பப்பாளி இலை சாறு டெங்கு காய்ச்சலை சரி செய்வதாகக் கூறப்படுகிறது. பப்பாளி இலை சாறு நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்கும் திறன் கொண்டது. மலேரியா, புற்றுநோய் இவற்றினை குணப்படுத்தும் தன்மை கொண்டது.பப்பாளி இலையில் உள்ள கைமோபப்பின், பப்பின் என்ஸைம்கள் இரத்தத்தில் பிளேட்லெட் அளவினை சீர் செய்யும் குணம் கொண்டவை. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் கல்லீரலையும் சீர் செய்யும்.

டெங்கு சிகிச்சை:

வைரஸ் கிருமி என்பதால் உதவியான சிகிச்சை முறைகளே கையாளப்படுகின்றது. உடல் வலி குறைத்தல், காய்ச்சலை கட்டுப்படுத்துதல், உடலில் நீர் சத்து ஏற்றுதல், நோயாளியை முழுமையான ஓய்வு எடுக்கச் செய்தல் போன்றவையே சிகிச்சை முறைகளாக அமைகின்றன.

கூடுதல் சிகிச்சை முறைகள் நோயாளியின் நிலையினைப் பொறுத்தே அளிக்கப்படுகின்றன. பொதுவாக இவர்களை நன்கு நீர் குடிக்க அறிவுறுத்தப்படும். டெங்குவால் இரத்தக் கசிவு ஏற்படுபவர்களுக்குக் கீழ்கண்ட அறிகுறிகள் இருக்கும்.

* படபடப்பு

* இரத்த கசிவு

* ஜில்லிட்ட உடல்

* நினைவு தடுமாறல்

* குறைந்த இரத்த அழுத்தம் அதிக பாதிப்பிலிருந்து வெளிவருபவரை கீழ்கண்ட முன்னேற்றத்திற்குப் பிறகே வீட்டிற்கு அனுப்புவர்.

* தொடர்ந்து 24 மணிநேரம் ஜுரம் இல்லாது இருத்தல்

* பசி * சரியான சிறுநீர் வெளிப்போக்கு

* இரத்த பரிசோதனை சீராய் இருத்தல்

* சீரான மூச்சு

* பிளேட்லெட் எண்ணிக்கை 50,000 செல்/ஹிலி

டெங்கு வராமல் தவிர்க்க

No automatic alt text available.

* கொசுக்களாலேயே டெங்கு காய்ச்சல் ஏற்படுவதால் வீட்டைச் சுற்றி எங்கும் நீர் தேக்கம் இல்லாமல் இருக்கச் செய்யுங்கள்.

* வீட்டிலும் காலி பக்கெட் போன்றவைகளை சிறிதும் நீர் இல்லாமல் கவிழ்த்து வையுங்கள்.

* கொசு தவிர்ப்பிற்கான வலை, மருந்து இவற்றினை கண்டிப்பாய் பயன்படுத்துங்கள்.

* மூடிய கதவின் கீழ் சிறிது இடைவெளி கிடைத்தாலும் கொசு புகுந்து விடும். கவனம் தேவை.

* குப்பை கூடையை நன்கு மூடி வையுங்கள்.

* அறைக்கதவுகளை மூடி சிறிது கற்பூரம் கொளுத்தி வையுங்கள். 15 நிமிடம் கதவை திறக்காதீர்கள். கொசுக்கள் ஓடிவிடும்.

நன்றி '

https://www.facebook.com/ddhanushi?hc_ref=ARSnRwF_4LQBsLkYkWtWenIlvgA7nB6V76tlOaeRXJvdT6tSVeFOWb4CkzcQnNn8kgY